புதுச்சேரியில் மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையை நடத்தி வரும் பாண்டி என்பவர் நேற்று இரவு 10.30 மணியளவில் கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை கடைக்கு வெளியே வெடிகுண்டு வீசியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கடைக்கு முன்னர் இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசிய காட்சி பதிவாகியுள்ளது. கடையின் ஷெட்டரில் அந்த வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. அந்நேரம் கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரோதம் காரணமாக வெடி குண்டு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

மூலக்கதை