கோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக உத்தரவு
நீலகிரி : கோடநாடு கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஜனவரி 29ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய சயன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக ஜாமீனை ரத்து செய்ய கோரப்பட்டிருந்தது. சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய முடியாது என்று உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளையில் சயன், மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து இல்லை என்று கூறிய நீதிபதி, ஜாமினை ரத்து செய்யக்கோரி போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.