விபத்தில் சிக்கிய வீரருக்கு சிஎஸ்கே 3 லட்சம் நிதியுதவி

தினகரன்  தினகரன்
விபத்தில் சிக்கிய வீரருக்கு சிஎஸ்கே 3 லட்சம் நிதியுதவி

சென்னை: விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் மார்ட்டினுக்கு சிஎஸ்கே சார்பில் 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பரோடாவைச் சேர்ந்தவர் ஜேக்கப் மார்ட்டின் (46).  கிரிக்கெட் வீரரான இவர் இந்திய அணிக்காக 1999ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ரஞ்சி கோப்பையிலும் விளையாடி உள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பரில் அவர் சாலை விபத்தில் சிக்கினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிலர் நிதியுதவி  அளித்து வருக்கின்றனர். அதைப் போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) நிர்வாகமும் மார்ட்டின் மருத்துவ செலவுகளுக்காக 3 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அலுவலர் கே.எஸ்.விசுவநாதன் கூறுகையில், ‘மார்ட்டின் நிலைமை குறித்து  பரோடா கிரிக்கெட் சங்கம் மூலம்  அறிந்தோம். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும்’ எனறார்.

மூலக்கதை