எடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிப்பு
சென்னை : எடப்பாடி பழனிசாமி குறித்து பேச மேத்யூவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது பெயர், புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேத்யூ பேசுவதாக எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேத்யூ, சயன், மனோஜ் உள்பட 6 பேர் முதலவர் எடப்பாடி குறித்து பேச தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.