இந்தியர்கள் சென்ற கப்பலில் தீ: 14 பேர் பலி

தினமலர்  தினமலர்
இந்தியர்கள் சென்ற கப்பலில் தீ: 14 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்கள், துருக்கி மற்றும் லிபியா நாட்டை சேர்ந்த கடல் மாலுமிகள் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேர் இறந்தனர். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.

15 இந்தியர்கள்


ரஷ்யாவின் கிரிமீயா பகுதியில், தான்சானியா நாட்டு கொடியுடன் இரண்டு கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு கப்பலில், இயற்கை எரிவாயு நிரப்பப்பட்டிருந்தது மற்றொரு கப்பல் டாங்கர் ஆகும். கேண்டி என பெயரிடப்பட்ட ஒரு கப்பலில், துருக்கியை சேர்ந்த 9 பேரும், இந்தியாவை சேர்ந்த 8 பேர் என 17 ஊழியர்கள் இருந்தனர். மாஸ்டிரோ என்ற மற்றொரு கப்பலில், துருக்கியை சேர்ந்த 7 பேர், இந்தியாவை சேர்ந்த 7 பேர் மற்றும் லிபியாவை சேர்ந்த ஒருவர் என 15 ஊழியர்கள் இருந்தனர்.

தப்பினர்


ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயு மாற்றப்பட்ட போது, தீவிபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிர் இழந்தனர். 12 பேர் மீட்கப்பட்டனர். 6 பேரை காணவில்லை. தீப்பிடித்த போது, கப்பலில் இருந்த சிலர் கடலில் குதித்து தப்பினர். உயிர் இழந்தவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மாயமானவர்கள் எங்கு உள்ளனர் என தெரியாததால், உயிர் இழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மூலக்கதை