ஒடிசாவில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

தினகரன்  தினகரன்
ஒடிசாவில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி

பொய்குடா: ஒடிசாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவின் கந்தமால் மாவட்டம், பாலிகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொய்குடா மலைப் பகுதியில்  உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டினை இழந்த லாரி, பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. இந்த லாரியில் சுமார் 40-50 பேர் கதாபூரில் இருந்து பிராமணிகான் நோக்கி பயணம் செய்துள்ளனர். இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலக்கதை