தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்.24., க்குள் முடிவு: தேர்தல் ஆணையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்.24., க்குள் முடிவு: தேர்தல் ஆணையம் தகவல்

மதுரை: தமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. தாமோதரன் தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்ய ஏப்ரல் வரை அவகாசம் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை செயலர் ஜனவரி 8ல் கடிதம் எழுதியுள்ளார்.

மூலக்கதை