அரசியல் குறித்து தனது நிலையை துணிச்சலாக வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன்  தினகரன்
அரசியல் குறித்து தனது நிலையை துணிச்சலாக வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : அரசியல் குறித்து தனது நிலையை திறந்த மனதுடன் வெளிப்படுத்திய நடிகர் அஜித்தின் செயல் பாராட்டத்தக்கது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அஜித் ஒரு தொழில்பக்தி மிக்கவர் என்றும், அவர் துணிச்சலாக தமது கருத்தை கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் யார் நினைத்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது, கொடநாடு விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மூலக்கதை