அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. த.பெ.தி.க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் குறித்த விவரங்கள் அளிக்க நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.