பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு
சென்னை : பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தை சேர்ந்த கலிபூங்குன்றன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏற்கனவே திமுக தொடர்ந்துள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.