ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மாணவர் தொடர்ந்த வழக்கு வாபஸ்

தினகரன்  தினகரன்
ஜாக்டோஜியோ போராட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மாணவர் தொடர்ந்த வழக்கு வாபஸ்

சென்னை : ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிராக மாணவர் கோகுல் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மாணவர் கோகுல் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்குடன் இணைத்துக் கொள்வதாக கூறி மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

மூலக்கதை