பாகிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லாரி மோதி விபத்து: 26 பேர் பலி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லாரி மோதி விபத்து: 26 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து பஞ்ச்குர் என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று 40 பேருடன் சென்று கொண்டிருந்தது. பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இதனைத் தொடர்ந்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.தீயில் சிக்கிய பயணிகள் உயிருக்குப் போராடினர். எஞ்சியவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துத் தப்பினர். இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைப்பெற்று வருவதாகவும் லாஸ்பேலா துணை ஆணையாளர் ஷபீர் மெங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மூலக்கதை