இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இன்று காலை அவர்கள், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களிடமிருந்து 53 ஆயிரத்து 460 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுமதி 29 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கொழும்பு – புதுக்கடை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை