ஓய்வூதியதாரர்கள் வசதிக்காக கருவூலக ஆணையரகம் தரவுதளம் அமைத்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வசதிக்காக கருவூல கணக்கு ஆணையரகம் தரவு தளத்தை அமைத்து உள்ளது.

ஓய்வூதியம் பெற்ற விவரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்து பெறுதல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப் பயன்கள் வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற பல விவரங்களை கருவூலங்களை அணுகாமலேயே அறிந்து கொள்ளலாம்.

சென்னை தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இந்த தரவு தளத்தை தமிழ்நாடு அரசின் கருவூல கணக்கு ஆணையரகம் உருவாக்கி உள்ளது.

இதன் மூலம், ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விபரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முன்பணம், புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் குடும்பநல நிதிபிடித்தங்கள் போன்ற விவரங்களையும் தங்களது ஓய்வூதிய கொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

இது தவிர ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், ஓய்வூதியர்களுக்கு தேவையான முக்கிய படிவங்கள் அளிக்கப்பட்டு உள்ளன.

ஓய்வூதியர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்களை இத்தரவு தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கருவூலங்களிலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னையிலும் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் தமிழக அரசின் சுமார் 7.30 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.

ஓய்வூதியர் தரவுதளத்தினை https://tnpensioner.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். 
இந்த தரவு தளத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை