பிக்பாஸ் ஜோடிக்கு விரைவில் திருமணம்
ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, அதில் கலந்து கொண்டவர்களில் சிலருக்கு சினிமாவிலும், சின்னத்திரையிலும் வாய்ப்புகளை தேடித் தந்து வருகிறது. இன்னும் சிலருக்கு எதிர்பாராதவிதமாக காதலை தோற்றுவித்து, புதிய உறவையும் ஆரம்பித்து வைத்துள்ளது.
அந்தவகையில் மலையாளத்தில் கடந்த வருடம் முதன்முறையாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்னத்திரை தொகுப்பாளினி நடிகையான பியர்லி மானி, என்பவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீனிஷ் என்பவருடன் காதல் வயப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதலையும், மோகன்லால் முன்னிலையில் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
அந்த நிகழ்ச்சி முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இரு தரப்பு பெற்றோரும் இவர்களது திருமணத்திற்கு சம்மதித்து, தற்போது இவர்களது திருமண நிச்சயதார்த்தம் எளிதான முறையில் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமண தேதியை அறிவிக்கப் போவதாக கூறி உள்ளனர் இந்த பிக்பாஸ் ஜோடி.