மோகன்லால் படப்பிடிப்பை நிறைவு செய்த பிருத்விராஜ்
மலையாள சினிமாவின் இளம் நடிகர்களுக்கும், சீனியர் நடிகர்களுக்கும் இடைப்பட்ட பிரிவில் இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்துவிட்ட இவர், முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து நடிகர் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
அரசியல் திரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் மோகன்லாலுடன் விவேக் ஓபராய், மற்றும் முக்கிய வேடங்களில் இயக்குனர் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
தன்னுடைய படங்களிலும் நடித்துக்கொண்டே இந்த படத்தையும் நான்கு கட்ட படப்பிடிப்புகளாக நடத்திவந்த பிருத்விராஜ், படப்பிடிப்பு துவங்கி ஆறு மாதம் நிறைவடைந்த நிலையில் லட்சத்தீவில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நேற்று நிறைவு செய்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைவில் முடித்து, வரும் சித்திரை விசு கொண்டாட்டமாக ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் தீவிரம் காட்டப்போகிறாராம் பிருத்விராஜ்.