நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட பா. ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திற்கு பிரதமர் மோடி, ரவிசங்கர் பிரசாத், உபி முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்கள் வருகின்றனர்.
பா. ஜ அனைத்து பகுதிகளிலும் வேர் ஊன்றி பல்வேறு கிளைகளாக விரிந்து பரந்துள்ளது. ரபேல் ஒப்பந்தந்தில் எந்த வித ஊழலும் நடக்கவில்லை என, சுப்ரீம் கோர்ட், பிரான்ஸ் அரசே கூறிவிட்டது.
ஊழல் அற்ற நேர்மையான ஆட்சியை பா. ஜனதா வழங்கியுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் பா. ஜனதா வெற்றி பெறும்.
நிச்சயம் பிரதமர் மோடி திருப்பூர் வருவார். இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து வெற்றிபெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.