எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த ஓபிஎஸ் அருகில் ஆதரித்த நான் ரோட்டில்: மாஜி அமைச்சர் பழனியப்பன் புலம்பல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த ஓபிஎஸ் அருகில் ஆதரித்த நான் ரோட்டில்: மாஜி அமைச்சர் பழனியப்பன் புலம்பல்

கரூர்: கரூர் உழவர் சந்தை அருகே அமமுக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அமைச்சர்களும், துணை சபாநாயகரும் ஒவ்வொரு கருத்தை கூறிக்கொண்டிருக்கின்றனர்.

எடப்பாடியால் இதை கடடுப்படுத்த முடியவில்லை. குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சி என்று கூற இவர்களுக்கு தகுதி கிடையாது. அவர் இருந்திருந்தால் பாஜவை இந்த அளவுக்கு ஆட்டம் போட விடுவாரா? டெல்லியே நடுங்கி இருக்கும்.

இவர்கள் டெல்லியில் போய் காலில் விழுந்துவிட்டு வருகிறார்கள். இது ஒரு போலி அதிமுக ஆட்சி.

இது தூக்கி எறியப்பட வேண்டும். எந்த தேர்தலையும் இவர்கள் சந்திக்க தயாராக வில்லை.

இருக்கிற வரை சுருட்டிவிட்டு போகவேண்டும் என்பதிலேயே  குறியாக இருக்கிறார்கள்.

எடப்பாடிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட நான் ரோட்டில் நிற்கிறேன்.

எதிர்த்து ஓட்டுப்போட்ட ஓபிஎஸ் அருகில் அமர்ந்துள்ளார்.   பதவி போனால் ஒரு காக்கா, குருவி கூட அதிமுகவில் இருக்காது. எல்லோரும் அங்கிருந்து வந்து விடுவார்கள்.

மத்தியஅரசை தடடிக்கேட்க துணிச்சல் இல்லாத அரசு இது.

இவ்வாறு அவர் பேசினார்.

.

மூலக்கதை