பழநி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பழநி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

பழநி: பழநி மலைக்கோயிலில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பழநி கோயிலில் தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதற்கிடையே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் பழநி வந்தார்.

இங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு வந்தார்.


கோயிலில் வழக்கமாக நடைபெறும் காலை நேர பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ரோப் கார் மூலம் கீழே இறங்கிய அவர், மதுரை புறப்பட்டு சென்றார்.

சென்னை தலைமை செயலகத்திலுள்ள தனது அறையில் ஓபிஎஸ் நேற்று சிறப்பு யாகம் நடத்தினார்.

இது மரபு மீறிய செயல் என்றும், சட்டத்திற்கு எதிரானது என்றும், முதல்வர் பதவியை பிடிக்க துணை முதல்வர் கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை