தொகுதி உடன்பாடு பேச்சு; தி.மு.க.,வில், 6 பேர் குழு

தினமலர்  தினமலர்
தொகுதி உடன்பாடு பேச்சு; தி.மு.க.,வில், 6 பேர் குழு

சென்னை : லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, தி.மு.க., சார்பில் பேச்சு நடத்த, துரைமுருகன் தலைமையில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்து, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் குழுவின் தலைவராக, துரைமுருகன், உறுப்பினர்களாக, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய, ஆறு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவில், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, சிவா, ஆ.ராஜா, டி.கே.எஸ்.இளங்கோவன், அ.ராமசாமி, பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை, தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை