மபி முன்னாள் முதல்வர் பேச்சு மாமா இன்னும் வீக் ஆகவில்லை

தினகரன்  தினகரன்
மபி முன்னாள் முதல்வர் பேச்சு மாமா இன்னும் வீக் ஆகவில்லை

புதுடெல்லி: ‘‘மத்திய பிரதேச தேர்தலில் தோற்று விட்டதால், இந்த மாமா இன்னும் பலவீனமாகி விடவில்லை’’ என்று சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.மக்களவை தேர்தலையொட்டி, பாஜ கட்சியின் டெல்லி மாநில இளைஞரணி பிரிவு சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. இதில், மத்தியப் பிரதேச மாநில  முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அவர் பேசியதாவது:சமீபத்தில் மத்தியப் பிரதேச தேர்தலில் பாஜ கட்சி ஆட்சியை பறிகொடுத்ததால்,  இந்த மாமா (சிவராஜ் சிங் சவுகான் மாமா என்று அன்புடன் அழைக்கப்படுவார்) பலவீனமடைந்து விட்டதாக எண்ண வேண்டாம். வரும் மக்களவை தேர்தலில்  மத்தியப் பிரதேசத்தில் பாஜ கட்சி 29 இடங்களில் 27 சீட்களை பிடித்து அமோக வெற்றி பெறும் என உறுதி அளிக்கிறேன். மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், அந்த ஆட்சி பெரும்பான்மை பலமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலையில்தான் உள்ளது.கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணி ‘மணமகன் இல்லாத திருமணம்’ போன்றது. மெகா கூட்டணி அமைக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பொதுவான ஒரு தலைமை இல்லை. அதுவே நம்மிடம், களத்தில் தலைமை ஏற்று போராட பிரதமர் மோடி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை