பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக வியாழனன்று கூடுகிறது...!

தினகரன்  தினகரன்
பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக வியாழனன்று கூடுகிறது...!

டெல்லி: சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு வரும் வியாழக்கிழமை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து இவ்விருவரும் தவிர மேலும் சில சிபிஐ அதிகாரிகள் அண்மையில் நீக்கப்பட்டனர். அதனையடுத்து புதிய இயக்குனர் பொறுப்புக்கான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலில் ஜே.கே. சர்மா மற்றும் பரமிந்தர் ராய் ஆகியோரின் பெயர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த தேர்வில் அதிகாரியின் பின்புலத்தையும் அவர் கையாண்ட வழக்குகள் மற்றும் அவர்கள் சந்தித்த சவால்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய சிபிஐ இயக்குனர் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை