மெக்சிகோ தீ விபத்து: பலி 73 ஆனது

தினமலர்  தினமலர்
மெக்சிகோ தீ விபத்து: பலி 73 ஆனது

திலாஹேலில்பன்: வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில், அந்நாட்டு பெட்ரோலிய நிறுவனமான, 'பெமெக்ஸ்' குழாய்கள் மூலம் பெட்ரோல் வினியோகம் செய்கிறது.ஹிடால்கோ மாகாணத்தில் உள்ள பெட்ரோல் குழாயிலிருந்து கசிந்த பெட்ரோலை, அப்பகுதி மக்கள், வாளி மற்றும் கேன்களில் பிடித்துச் சென்றனர். அப்போது, குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி, 21 பேர் உயிரிழந்தனர்; 77 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், தீ அணைக்கப்பட்ட பின், மேலும் பல, சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை, 73 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை