கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் பழனிசாமி
நெல்லை: கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேளாண் துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடாக கிடைக்க உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.