நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!

நேற்று சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி, நாடும் முழுவதும் இடம்பெற்ற பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 84,000 பேர்வரை கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமைசார் தெரிவித்துள்ளார். 
 
நேற்றைய தினம் நண்பகலை ஒட்டி 27,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கபப்ட்டிருந்த நிலையில், நாள் முடிவில் 84,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடந்த வாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் அளவிலேயே உள்ளது. பரிசுக்குள் 7,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது கடந்த வாரத்தில் 8,000 ஆக இருந்தது. என்றும் இல்லாதவாறு நேற்று Toulouse நகரில் 10,000 பேர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். 
 
பரிசுக்குள் நண்பகலின் பின்னர் ஆங்காங்கே சில சிறியளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது. ஆர்ப்பாட்டம் ஆரம்பித்த நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் வன்முறைகள் பெரிதளவிலாக் இடம்பெறாத ஆர்ப்பாட்டம் இதுவென தெரிவிக்கப்படுள்ளது.

மூலக்கதை