அமெரிக்காவில் இந்தியருக்கு விருது

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர், குரிந்தர் சிங் கால்சாவுக்கு, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' விருது வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், குரிந்தர் சிங் கால்சா, ௪௫. சீக்கியர்களின் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அமெரிக்க விமான நிலையங்களில், சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. அமெரிக்க அதிகாரிகள் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி, கால்சா போராட்டங்கள் நடத்தினார். இதனால், அமெரிக்க விமான நிலையங்களில், சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.அவரது போராட்ட வெற்றியை கவுரவிக்கும் வகையில், இண்டியானா மாகாண நிர்வாகம் சார்பில், உயரிய, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' விருது வழங்கப்பட்டது.

மூலக்கதை