நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!

ஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை மீட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. Saint-Maximin (Oise) நகரில் இன்று சனிக்கிழமை ஜனவரி 19 ஆம் திகதி வீதி கண்காணிப்பில் ஜோந்தாமினர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில், வீதியில் சிறுவன் ஒருவன் தனியே நடந்துவந்துகொண்டிருப்பதை பார்த்துள்ளனர். 1:45 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் இரவு ஆடை அணிந்திருந்ததாக ஜோந்தாமினர் குறிப்பிட்டனர். 
 
விசாரணைகளில், சம்பவ இடத்துக்கு அருகே உள்ள அவனது சித்தியின் வீட்டில் குறித்த சிறுவன் தங்கியிருந்தான் எனவும், நள்ளிரவில் அவன் மீண்டும் தனது பெற்றோர்களிடம் செல்ல எண்ணி, வீட்டில் இருந்து தனியே புறப்பட்டு வந்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் குறித்த சிறுவன் அவனது பெற்றோர்களிடம் சேர்க்கப்பட்டான். 

மூலக்கதை