கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: காங்-மஜத தலைவர்களுக்கு எடியூரப்பா பேட்டி

தினகரன்  தினகரன்
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: காங்மஜத தலைவர்களுக்கு எடியூரப்பா பேட்டி

பெங்களூரு : கூட்டணி ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் பாஜ ஈடுபடாது. எனவே, இ்ந்த  விவகாரத்தில் மஜத-காங்கிரஸ் தலைவர்கள் பீதி அடைய தேவையில்லை என கர்நாடக  பாஜ தலைவர் எடியூரப்பா கூறினார். பெங்களூருவில் நேற்று அவர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி ஆட்சியை வீழ்த்த பாஜ  முயற்சிக்கிறது என மாற்று கட்சிகளை சேர்ந்த தலைவர்–்கள் யாரும் பீதி அடைய  தேவையில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாங்கள் என்ன  செய்யவேண்டுமோ அதைத்தான் செய்ய முடிவு செய்துள்ளோம். கூட்டணி  கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டு ஆட்சி கவிழ்கிறது என்றால், அதிக அளவில்  எம்.எல்.ஏ.க்களை ெகாண்டுள்ள  பாஜ என்ன  செய்ய வேண்டும் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்பதில் சந்தேகம்  வேண்டாம். அரியானாவில் உள்ள குருகிராமம் ரிசார்ட்டில் தங்கியுள்ள  பாஜ எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு திரும்பும்படி நான்  உத்தரவிட்டுள்ளேன். கூட்டணி  ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் பாஜ எப்போதும் ஈடுபடாது. எனவே, இந்த  விவகாரத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பீதி அடைய வேண்டிய  அவசியம் இல்லை என்றார்.

மூலக்கதை