எச்.ஏ.எல்., மூலம் 8 விமானங்கள் : இந்திய விமானப்படை முடிவு

தினமலர்  தினமலர்
எச்.ஏ.எல்., மூலம் 8 விமானங்கள் : இந்திய விமானப்படை முடிவு

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, 8 சுகோய் ரக போர் விமானங்களை வாங்க, இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:இந்தியா - ரஷ்யா நாடுகள் கூட்டு சேர்ந்து, சுகோய் ரக விமானங்களை தயாரித்து வருகின்றன.நம் விமானப்படையில் இருந்த சில போர் விமானங்கள், விபத்துகளில் சிக்கி சேதமடைந்தன. இவற்றுக்கு மாற்றாக, பொதுத்துறையை சேர்ந்த, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து, எஸ்.யு-௩௦ எம்.கே.ஐ., வகையில், எட்டு சுகோய் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை