2025க்குள் ராமர் கோவில்: ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை

தினமலர்  தினமலர்
2025க்குள் ராமர் கோவில்: ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை

புதுடில்லி, 'அயோத்தியில், 2025ம் ஆண்டுக்குள், ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.

'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, அவசர சட்டம் இயற்ற வேண்டும்' என, ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், வரும், 29ல், துவங்க உள்ளது.

இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் பையாஜி ஜோஷி, நேற்று கூறியதாவது: 'அயோத்தியில், 2025ம் ஆண்டில் ராமர் கோவில் கட்டப்படும்' என, நான் கூறவில்லை. 2025ம் ஆண்டுக்குள், கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். ராமர் கோவில் கட்டுவதற்காக, எந்த சமூகத்துடனும் மோதலில் ஈடுபடுவதை, ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை. இதற்கு, அவசர சட்டம் இயற்றுவது தான், ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை