போலீஸ் அகாடமியில் வெடிகுண்டு: 21 பேர் பலி
போகோடா, மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் போலீஸ் அகாடமி வளாகத்தில் செயல்படும் பள்ளியில், கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.தலைநகரம் போகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி பள்ளியில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், பள்ளி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில், 21பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.நா., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.'இத்தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம்' என ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.