பாஸ்வேர்டை கூற மறுத்த கணவர் எரித்துக் கொன்ற மனைவி

தினமலர்  தினமலர்

ஜகர்தா, இந்தோனேசியாவில் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டை கூற மறுத்த கணவரை, எரித்துக் கொன்ற மனைவியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.மேற்கு நுசா தெங்கரா பகுதியை சேர்ந்தவர் டெடி. இவர் மாடியில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்களை சீரமைத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த அவர் மனைவி இல்ஹம் கயானி, கணவரின் ஸ்மார்ட்போன் பாஸ்வேர்டை கேட்டார். அவர் கூற மறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. டெடி தன் மனைவியை தாக்கவே, ஆத்திரமடைந்த மனைவி, பெட்ரோலை எடுத்து கணவரின் மீது ஊற்றி தீ வைத்தார். டெடியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து, அவரை மருத்துவ மனைவியில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் டெடி உயிரிழந்தார்.

மூலக்கதை