சிரியாவில் கூட்டுப்படை தாக்குதல்: 20 பேர் பலி

தினமலர்  தினமலர்

டமாஸ்கஸ், சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். குழுவினரும் எதிரான நடவடிக்கை களில் இறங்கி உள்ளனர்.இவர்களை கட்டுக் குள் கொண்டுவரும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் போரில் இறங்கி உள்ளன.இந்நிலையில், சிரியா வின் டெயிர் அல் சோர் மாகாணத்தில் சர்வதேச கூட்டுப் படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். தகவலறிந்து அங்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மூலக்கதை