பொபினி - இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை! - காவல்துறையினரால் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பொபினி  இணையம் மூலம் மகளுக்கு காதல் வலை வீசிய தந்தை!  காவல்துறையினரால் கைது!!

பொபினியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையத்தளமூடாக தனது மகளுக்கு காதல் வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த நபர் பல்வேறு குற்றச்சாட்டுக்கு கீழ் கைது செய்யபப்ட்டுள்ளார். குறித்த நபர் தனது 10 வயது மகள் மீது பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை பிரயோகித்துள்ளார் எனவும், காதலர்களை தேடும் இணையத்தளம் ஒன்றின் ஊடாக தனது மகளுக்கே குறித்த நபர் பல துன்புறுத்தல்களை கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 
 
இருப்பினும், இது முதல்கட்ட தகவல்கள் மாத்திரமே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தனது கணவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன...

மூலக்கதை