Hauts-de-Seine - மூன்று வயது மகளுடன் நான்காவது தளத்தில் இருந்து குதித்த பெண்!!

PARIS TAMIL  PARIS TAMIL
HautsdeSeine  மூன்று வயது மகளுடன் நான்காவது தளத்தில் இருந்து குதித்த பெண்!!

23 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று வயது மகளுடன் நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். 
 
நேற்று முன்தினம் புதன்கிழமை காலை 9 மணி அளவில் Gennevilliers பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். தான் வசிக்கும் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து தனது மகளை கட்டியணைத்தவாறு கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ள பலர் நேரிடையாக பார்த்துள்ளனர். உடனடியாக அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர். 
 
பின்னர் சிறுமி மற்றும் தாயார் மீட்கப்பட்டனர். சிறுமி பதினைந்தாம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அச்சிறுமியின் தாயார் Clichy இல் உள்ள  Beaujon மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த பெண் தற்கொலை முயற்சிக்கு முன்னர் எவ்வித கடிதங்களும் விட்டுச் செல்லவில்லை எனவும், ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் குறித்த பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்திருந்தமையும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மூலக்கதை