இறந்த மனைவியுடன் ஒரு வாரம் கணவன் செய்த காரியம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இறந்த மனைவியுடன் ஒரு வாரம் கணவன் செய்த காரியம்!

 

 
பிரித்தானியாவில் உயிரிழந்த மனைவி சடலத்துடன் ஒருவாரம் தங்கியிருந்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Skegness நகரை சேர்ந்தவர் டேவிஸ். இவர் மனைவி ஜூலியா பைரீன் (54). ஜூலியா கடந்தாண்டு மே மாதம் தனது வீட்டின் சோபாவில் படுத்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார்.
 
இதையடுத்து ஜூலியாவின் கணவர் டேவிஸ் மனைவி சடலத்தை போர்வையால் போர்த்தி விட்டு ஒரு வார காலம் அதனுடையே தங்கியுள்ளார்.
 
இந்த காலக்கட்டத்தில் மனைவியின் வங்கி கார்டை வைத்து மது வாங்கி அதிகளவு குடித்துள்ளார் டேவிஸ். இந்நிலையில் ஜூலியாவின் நண்பர் மார்குக்கு செல்போனில் டேவிஸ் மெசேஜ் அனுப்பினார்.
 
அதில், ஜூலியா இறந்துவிட்டார் என குறிப்பிட்டார். இதையடுத்து மார்க் பொலிசில் தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜூலியாவின் சடலத்தை கைப்பற்றியதோடு, இது தொடர்பாக டேவிஸை கைது செய்தனர்.
 
அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
அதில், சம்பவத்தன்று டேவிஸும், ஜூலியாவும் அதிகளவு மது அருந்தியதும் அந்த போதையிலேயே ஜூலியா இறந்ததும் தெரியவந்தது.
 
மேலும், பல ஆண்டுகளாக ஜூலியாவை டேவிஸ் அடித்து கொடுமைப்படுத்தியதும் அந்த அதிர்ச்சியும் அவர் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
 
தொடர்ந்து சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை