பங்குச்சந்தைகள் உயர்வு, ரூபாயின் மதிப்பு சரிவு

தினமலர்  தினமலர்
பங்குச்சந்தைகள் உயர்வு, ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 72.16 புள்ளிகள் உயர்ந்து 36,393.45ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 24.50 புள்ளிகள் உயர்ந்து 10,914.80ஆகவும் வர்த்தகமாகின.

உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் முன்னேற்றமான சூழலால், உள்ளூர் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு சரிவு

பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயுர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.71.15-ஆக இருந்தது. காலை 11 மணியளவில் 5 காசுகள் சரிந்து ரூ.71.30ஆக வர்த்தகமானது.

மூலக்கதை