மத்திய, மாநில தொழிற்கல்வி ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய, மாநில தொழிற்கல்வி ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி ; நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் இதர  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு 7வது மத்திய ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.

1241. 78 கோடி செலவாகும் என்றும், 7வது மத்திய ஊதியக் குழுவின் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக மொத்த அரசு செலவினங்களில் 50 சதவிகிதத்தை (1. 1. 2016 முதல் 31. 3. 2019 வரை) மத்திய அரசு திருப்பிச் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஊதிய உயர்வு 2016 ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில், பிப்ரவரி 1ம் தேதி மத்திய பாஜ அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் சில நிவாரணங்களை அறிவிக்கும் என்று 50 லட்சம் ஊழியர்கள் நம்புகின்றனர். தற்போது, மத்திய ஊழியர்கள் குறைந்தபட்சம் சுமார் 18,000 ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.

ஆனால், இது 26,000 ரூபாய்க்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை