Limay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Limay  மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!

Limay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த வழக்கில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
குறித்த 14 வயது சிறுவனை கத்தியால் குத்தியது 13 வயதுடைய அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாள் எனவும், தனது பைக்குள் எப்போதும் சமையலறை கத்தி ஒன்றை வைத்துக்கொண்டே பாடசாலைக்கு வருகை தந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. 
 
தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் குறித்த மாணவியின் சகோதரனின் நண்பன் எனவும், வாக்குவாதம் ஒன்றில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே குறித்த பெண் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளாள் என தெரியவந்துள்ளது. காயமடைந்த சிறுவனுக்கு அவனது பின்புறத்தில் ஆழமாக கத்திக்குத்து இடம்பெற்றிருந்தது எனவும், திங்கட்கிழமை அவனுக்கு Necker மருத்துவமனையில் அறுவைச்கிச்சை அளிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை