பிரித்தானிய அரசிற்கு விழுந்த பேரிடி! வரலாற்று தோல்வியை சந்தித்த தெரேசா மே
பிரித்தானியா பிரதமர் தெரேசா மே முன்னெடுத்த பிரெக்ஸிற் ஒப்பந்தமானது 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
பிரித்தானியா அரசியல் வரலாற்றில் ஆளும் அரசு எதிர்கொள்ளும் மாபெரும் தோல்வி இதுவெனவும் கணக்காக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 432 உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில் 202 வாக்குகள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர் கட்சி தலைவர் Jeremy Corbyn நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
இதனால் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை பிரித்தானியா எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.