நீருக்குள் மறையவுள்ள 12,000 ஆண்டுப் பழமைவாய்ந்த கிராமம்!
துருக்கியின் Hasankeyf கிராமம் கூடியவிரைவில் நீருக்குள் மூழ்கவிருக்கிறது. அங்கு நிறுவப்படும் அணையினால் உருவாகவிருக்கும் ஏரியினுள் 12,000 ஆண்டுப் பழமைவாய்ந்த கிராமம் இன்னும் சில மாதங்களில் மூழ்கிவிடும்.
துருக்கியின் இரண்டாம் பெரிய அணையாக அமையவிருக்கிறது தற்போது உருவாகும் அணை. அவ்வளவு மேம்பாடு காணாத தென்கிழக்குத் துருக்கியின் பொருளியல் சூழலுக்குப் புத்துயிர் கொடுக்கும் நோக்கில் நிறுவப்படுகிறது அணை.
எப்போதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் ஒன்று Hasankeyf. அங்கு வசிக்கும் 3,000 கிராமவாசிகளில் சுமார் பாதிப் பேருக்கு அணை எழுப்பப்படுவதில் உடன்பாடு இல்லை.
சிலர் பொருளியல் வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தாலும் வேறு சிலர் பழங்கால வழிபாட்டுத் தலங்கள் அழிவதை எண்ணி வருத்தமடைகின்றனர்.