கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை: அருண் ஜெட்லி டுவீட்

தினகரன்  தினகரன்
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை: அருண் ஜெட்லி டுவீட்

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளது, கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு எந்த வரியையும் உயர்த்தவில்லை என்றும் மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்தது என்றார்.   மேலும், வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த வரியையும் உயர்த்தாமல், ஆண்டுதோறும் சுமார் ரூ.2 லட்சம் கோடி வரி தள்ளுபடியை மத்திய அரசு அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை