0 ரன்னுக்கு 7 விக்கெட்!

தினகரன்  தினகரன்
0 ரன்னுக்கு 7 விக்கெட்!

இந்தூரில் ஆந்திரா அணியுடன் நடந்த ரஞ்சி பி பிரிவு லீக் ஆட்டத்தில், மத்தியப்பிரதேச அணி 307 ரன் வித்தியாசத்தில் தோற்று பரிதாபமாக வெளியேறியது. முதல் இன்னிங்சில் ஆந்திரா 132 ரன்னிலும், மத்தியப்பிரதேசம் 91 ரன்னிலும் ஆல் அவுட்டாகின. 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஆந்திரா 301 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 343 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி, 13 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்தது. மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காத ம.பி. 16.5 ஓவரில் 35 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது (5 பேர் டக் அவுட்). இந்த தோல்வியால் மத்தியப்பிரதேசம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

மூலக்கதை