நற்றிணை பதிப்பகம் சார்பில் பிரபஞ்சன் நினைவு சிறுகதை போட்டி அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நற்றிணை பதிப்பகம் சார்பில் பிரபஞ்சன் நினைவு சிறுகதை போட்டி அறிவிப்பு!

நற்றிணை பதிப்பகம் சார்பில் பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நல்ல தமிழ் நூல்களை நற்றிணை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மகத்தான படைப்பாளுமையான எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவைப் போற்றும் விதமாகவும், படைப்பாளிகளின் புதிய முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் பிரபஞ்சன் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்றை இந்த ஆண்டு நற்றிணை பதிப்பகம் நடத்துகிறது.முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக.ரூ.2 ஆயிரம், ஊக்கப் பரிசாக 10 சிறுகதைகளுக்கு தலா.ரூ.500 வழங்கப்பட உள்ளது.

சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். யூனிகோடு எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்பியவரின் உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி தெளிவாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

கையெழுத்து- தட்டச்சுப் பிரதிகள் ஏற்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். சிறுகதைப் போட்டிக்கு கதைகள் அனுப்பி வைக்க கடைசித்தேதி: பிப்ரவரி 15, 2019.வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ல் வெளியிடப்பட்டு, பிரபஞ்சனின் பிறந்த தினமான  ஏப்ரல் 27 அன்று புத்தகமாக வெளியிடப்படும். மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ஏற்கப்பட மாட்டாது.

கதைகள் இதற்கு முன் வெளியானதில்லை என்னும் உறுதிமொழி தர வேண்டும்.  போட்டி குறித்து  எந்தவிதமான கடிதத் தொடர்போ, தொலைபேசித் தொடர்போ வைத்துக் கொள்ளக் கூடாது.சிறுகதைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மூலக்கதை