அரசு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில பாட தேர்வுகளை பிற்பகலுக்கு மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அரசு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில பாட தேர்வுகளை பிற்பகலுக்கு மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கில பாட தேர்வுகளை பிற்பகலுக்கு மாற்றி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

10-ம்  வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாட தேர்வு காலையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 14 முதல் 29 வரை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம்பாட தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு துவங்க உள்ளது. மற்ற பாடங்கள் வழக்கம்போல காலை 10 மணிக்கு நடக்கும்.

இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது

மூலக்கதை