ஆன்ட்ரியா ஆதங்கம்
தனித்துவம் மிக்க நடிகை என்று பெயர் எடுத்திருக்கும் ஆன்ட்ரியா, தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர். அவரும் தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவும் அவர் துவங்கி இருக்கிறார்.
இந்நிலையில், ஆணுக்கு இணையாக பெண்ணுக்கு திரையுலகில் சம்பளம் கொடுக்க மறுக்கின்றனர் என திரையுலகினர் குறித்து புகார் வாசிக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
'தரமணி' படத்துக்குப் பின், நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் உள்ளப் படங்கள் எனக்கு வரிசையாக வந்தன. அது கூட சரியாகத்தான் இருக்கும் என முடிவெடுத்து, நானும் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கத் துவங்கி விட்டேன். ஆனால், படத்தில் ஆண் ஹீரோவுக்கு கொடுப்பது போன்ற சன்மானத்தை, பெண்ணாக இருந்து படத்தில் முக்கியத்துவத்துடன் நடித்திருந்தாலும், கொடுக்க மறுக்கின்றனர். திரையுலகிலும் ஆணாதிக்கம் தான் மேலோங்கி இருக்கிறது. ஆணுக்கு இருக்கும் மரியாதையும், உரிமையும் பெண்ணுக்கு சினிமாவில் இல்லை.
இவ்வாறு ஆன்ட்ரியா கூறியுள்ளார்.