புரோ கபடி லீக் பாட்னாவை வென்றது குஜராத்
கொல்கத்தா: புரோ கபடி லீக் தொடரில், குஜராத் அணி 37-29 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணியை வென்றது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற 129வது லீக் ஆட்டத்தில், பாட்னா, குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் குஜராத் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வென்றது. இது, குஜராத் அணிக்கு கிடைத்த 17வது வெற்றியாகும்.
பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
பாட்னா அணி இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 11 தோல்வி, 2 டிரா என 55 புள்ளிகள் பெற்றுள்ளது.
‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பெங்களூரு, பெங்கால் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மற்றொரு இடத்திற்கு பாட்னா, உ. பி.
ஆகிய அணிகள் மோதுகின்றன. உ. பி. , அணி தனது கடைசி லீக் போட்டியில் பெங்கால் அணியை இன்று சந்திக்கிறது.
இப்போட்டியில், உ. பி. அணி வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
தோல்வி அடைந்தால் பாட்னா அணி அடுத்த கட்டத்துக்கு செல்லும்.
எனவே, இனிவரும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும்.