ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு : டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு : டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய டேபிள் டென்னிஸ் முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா. பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவர், இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் போட்டியில் வெண்லகம் வென்றுள்ளார். சர்வதேச தரவரிசையில் 58வது இடத்தில் உள்ள இவர், 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு என கூறியுள்ளார். இதுகுறித்து மணிகா கூறியதாவது:

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது கனவு.

இந்த இலக்கை படிப்படியாகதான் அடைய முடியும். டாப்-30 இடங்களுக்குள் வந்துவிட்டால், ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெறமுடியும்.

எனவே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடுவேன். காமன்வெல்த் போட்டிகளுக்கு பின்னர் இந்தியா விளையாட்டில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியது, காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது ஆகியவை இந்த ஆண்டில் எனக்கு மறக்க முடியாததாக அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை