வெல்லத்தில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் விவசாயிகள் கோரிக்கை

தினகரன்  தினகரன்
வெல்லத்தில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் விவசாயிகள் கோரிக்கை

சேலம்: வெல்லத்தில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கரும்பு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ரசாயனம் கலந்து வெல்லம் தயாரிப்போர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் கூறியுள்ளனர். 80% சர்க்கரையை கலந்து வெல்லம் தயாரிப்பால் கரும்பு விலை பாதியாக குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கலப்பட வெல்லத்தை அரசே ஊக்குவிப்பதாக கரும்பு விவசாயிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

மூலக்கதை