மீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் 'ஸ்டெர்லைட்'

தினமலர்  தினமலர்
மீண்டும் இயங்க அனுமதி; அரசை நாடும் ஸ்டெர்லைட்

புதுடில்லி: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை அடுத்து, மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கும்படி தமிழக அரசை நாட உள்ளதாக, ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதில் ஏற்பட்ட வன்முறையில், 13 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதையடுத்து, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, டில்லியில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயம், 'ஆலை மீண்டும் செயல்படலாம்' என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, ''ஆலை தொடர்ந்து செயல்பட உரிய அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசை நாட உள்ளோம்,'' என, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார், ராம்நாத் தெரிவித்தார்.

மூலக்கதை